தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் மணிகண்டன். இவர் 8 தோட்டாக்கள், காதலும் கடந்து போகும், விக்ரம் வேதா, காலா, சில்லு கருப்பட்டி, ஏலே, ஜெய் பீம், குட் நைட் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கின்றார்.இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது ஜெய்பீம் திரைப்படம் தான்.
இது தவிர இவர் அண்மையில் கதாநாயகனாக நடித்து வெளியாகிய குட்நைட் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.இந்நிலையில் நடிகர் மணிகண்டன் சமீபத்திய பேட்டி ஒன்றில், உங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத நாள் எது என்ற கேட்கப்பட்ட போது அதற்கு ஓபனாகப் பதில் கூறியுள்ளார்.
அதாவது அந்த நபர் யார் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் அந்த சம்பவத்தை என்னால் எப்போதுமே மறக்க முடியாது. அப்போது நான் கல்லூரியில் படித்துகொண்டிருந்தேன். 19 வயது தான் இருக்கும்.
காய்ச்சல் வந்து குணமான இரண்டாவது நாள், ஒரு படத்திற்கு ஆடிஷனுக்கு சென்றேன். அப்போது அங்கிருந்த உதவி இயக்குநர்கள், டயலாக் பேப்பரை கொடுத்து படித்து பார்த்துவிட்டு வந்து நடிக்க சொன்னார்கள். நானும் நடிக்க சென்றேன். அப்போது, அங்கு வந்த இயக்குநர், உதவி இயக்குநர்களை திட்டத் தொடங்கிவிட்டார்.
இந்த மூஞ்சியையா அந்த கேரக்டருக்கு ஆடிஷன் செய்கிறீர்கள் என்று கூறி மிக மோசமாக திட்டினார். என்னையும் கூப்பிட்டு, உனக்கெல்லாம் நடிக்க வேண்டும் என்று ஆசையா? உங்கள் வீட்டில் கூறினாயா? அவர்களும் கூட உன்னை தடுக்கவில்லையா? என்று மிகவும் அசிங்கபடுத்தி அனுப்பிவிட்டார். முதல்முறை என்பதால், என்னால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இப்போது வரை அந்த இடத்திற்கு சென்றால், வியர்த்து கையெல்லாம் நடுங்கிவிடும் என்று உருக்கமாக பேசியுள்ளார் .
Listen News!