தமிழ் சினிமாவில் சென்னை-28 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் விஜயலட்சுமி. இவர் இதனைத் தொடர்ந்து அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், ஆடாம ஜெயிச்சோமடா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மேலும் திருமணத்திற்குப் பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். அந்த வகையில் சன் டிவியின் நாயகி சீரியலிலும் கலைஞர் தொலைக்காட்சியில் டும்டும்டும் என்னும் சீரியலிலும் நடித்திருந்தார்.
இது தவிர சமீபத்தில் ஷு தமிழில் ஒளிபரப்பாகிய சர்வைவர் நிகழ்ச்சியிலும் பங்குபற்றி போட்டியாளராகக் கலந்து கொண்டு வெற்றியாளராகத் தேர்வாகினார். விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபல்யமானார்.
இவர் கிருஷ்ணா நடித்த பண்டிகை படத்தை இயக்கிய பெரோஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடும் ஒரு வீடியோ ஒன்றை சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.
அதற்கு ஒரு பெண் ” இந்த ஆட்டம் உனக்கு தேவையா ஒரு அம்மாவா இருக்க” என்று கமென்ட் செய்தார், அந்த பெண்ணை லெப்ட் அன்ட் ரைட் வாங்கியுள்ளார் விஜயலட்சுமி.
தன்னுடைய ரிப்ளேவில், அம்மாவானால் மூலைல உட்கார்ந்து ஐயோ என் லைஃப் முடிஞ்சு போச்சுன்னு வருத்தப்படனுமா? நீ வேணும்னா வருத்தப்படு உனக்கு சிலை வைப்பாங்க.இது என் லைஃப் என் இஷ்டத்துக்கு நான் இருப்பேன் உங்க அட்வைஸ் கூந்தலை பின்னி நீங்களே பூ வைத்துக் கொள்ளவும் என்று சரமாரியாக பதிலடி விளாசியுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!