• Sep 20 2024

கேள்வி கேட்பதற்கு முன்பு ஹோம்வொர்க் பண்ணிட்டு வாங்க- கடும் கோபமாகப் பேசிய டாப்ஸி- பரபரப்பில் பாலிவூட் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை டாப்ஸி கோபப்பட்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் டாப்ஸி. இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.அத்தோடு தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

அந்த வகையில் தற்பொழுது நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து  'ஜன கன மன' படத்தில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக 'தோபாரா'என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தை அனுராக் காஷ்யப் இயக்கியிருந்தார்.


இப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களே அதிகமாகக் கிடைத்தது.இப்படம் வெளியாவதற்கு முன்பு சமூக வலைத்தளத்தில் சில ரசிகர்கள் படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர்.  

இந்நிலையில் டாப்ஸி சமீபத்திய விழா ஒன்றில் பங்கேற்றபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது டாப்ஸியிடம் ‘தோபாரா’ படத்துக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டாப்ஸி, "எந்த படத்துக்கு இது நடக்கல" என பதிலளித்தார். 

பின்பு தொடர்ச்சியாக டாப்ஸியிடம் கேள்வி கேட்க, உடனே டாப்ஸி "முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். பிறகு உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன். கேள்வி கேட்பதற்கு முன்பு ஹோம்வொர்க் பண்ணிட்டு வாங்க" என்று கோபமாக கூறினார். இவரது பேச்சு தற்போது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

Advertisement