தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். பீஸ்ட் படத்தினைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகின்றது.
இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.அத்தோடு இதன் முதலாவது சிங்கிள் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.மேலும் வாரிசு படம் வெளியாகும் அதே நாளில் துணிவு படமும் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
அத்தோடு வாரிசு படத்தை விட துணிவு படத்திற்கு அதிகமான திரையரங்குகள் கிடைத்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர். இது ஒரு புறம் இருக்க விஜய்யின் தாயாரான ஷோபனா ஒரு நிகழ்ச்சியில் பங்குபெற்றுக் கொண்டிருக்கும் போதே அவர் தனது மகனுக்கு போன் செய்து பேசியுள்ளார்.
அத்தோடு அவரை ஜோ என செல்லமாக அழைத்து உனக்கு மிகவும் பிடித்த சர்க்கரை பொங்கல் நான் உனக்கு செய்து தருகிறேன் என கூறியிருக்கிறார்.இதைக்கேட்ட ரசிகர்கள் அட நம்ம விஜய்யின் பெயர் ஜோவா என கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!