தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி.இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.
தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் கஸ்தூரி. அதில் அரசியல் குறித்து,சமூக நிகழ்வுகள் குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
தற்போது சீரியல் நடிகையாக நடித்து வரும் நடிகை கஸ்தூரி கடந்த 2000 ஆம் ஆண்டு ரவிகுமார் என்ற மருத்துவரை திருமணம் செய்தார்.
திருமணமாகியதும் கணவர் வெளிநாட்டில் வேலையை பார்த்து வருகிறார். அத்தோடு கஸ்தூரி இரு குழந்தைகளை பெற்றெடுத்து இருவரையும் வெளிநாட்டில் படிக்க வைத்து வருகிறார்.
மகன் மகளையும் கிடைக்கும் நேரத்தில் பார்க்க சென்றுவிடுவார். இந்நிலையில், அவரது மகனின் பிறந்த நாளன்று வாழ்த்து கூறி மகனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் நடிகை கஸ்தூரி.
Listen News!