2001ல் வெளியான தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் ஏ.ஆர் முருகதாஸ்.இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய ரமணா, கஜினி ,துப்பாக்கி, 7ம் அறிவு ,கத்தி ,ஸ்பைடர் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே பேராதரவைப் பெற்றிருக்கின்றன.
கள்ளக்குறிச்சியில் பிறந்த ஏ.ஆர்.முருகதாஸ் அதே ஊரைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவரது மனைவி ரம்யா மிகவும் பக்திமான். இதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி கோவில் குளத்தை சுற்றி வருவார்கள்.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஒரு மகன், மகள் உள்ளார்கள்.பெரும்பாலும் சில பிரபலங்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துவதில்லை.ஆனால் முருகதாஸ் சற்று வித்தியாசமானவர்.
எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் செல்வது வழக்கம். இத்தனைக்கும் அவர் தனது மகனையும் மகளையும் அடிக்கடி தனது இடத்திற்கு அழைத்துச் செல்வாராம். விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கூட இருவரையும் அழைத்துச் சென்றாராம். இவர்களும் விஜய்யை சந்தித்தனராம். இந்த நிலையில் இப்போது இவரது குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.
Listen News!