சூர்யா நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வந்தாலும் இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களாக உருவாகி வரும் வாடிவாசல் திரைப்படத்தை தான் இவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வருகிறார்கள். இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்பொழுது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இருப்பினும் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் படம் உருவாக இருக்கிறது என எப்பொழுதே தகவல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இடையில் சில காலங்கள் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டு போய்விட்டது.
இதனை தொடர்ந்து பார்த்தால் வாடிவாசல் திரைப்படத்தில் இடம் பெறும் காளைகளை அடக்குவதற்கான பயிற்சிகளையும் சூர்யா எங்கு சென்றாலும் எடுத்து வருகிறாராம்.சமீபத்தில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வாடிவாசல் திரைப்படத்தை பற்றி ஒரு சில தகவல்களை பேசியதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது அதில் நான் எங்கு சென்றாலும் வாடிவாசல் திரைப்படத்தை பற்றி தான் கேட்டு வருகிறார்கள் படம் மட்டும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் காளைகளுக்கான பயிற்சி தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது இதுவரை காளைகளுக்கான பயிற்சிக்கு மட்டும் கிட்டத்தட்ட 1.5 கோடி செலவாகி உள்ளதாக கலை புலி தாணு கூறியதாக இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வாடிவாசல் திரைப்படம் இவரது திரைப்பயணத்தில் இவருக்கு திருப்பு முனையாக கூட இந்த திரைப்படம் அமைய வாய்ப்பு அதிகம் இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் ஆகி கொண்டே தான் இருக்கிறது அந்த வகையில் கண்டிப்பாக வாடிவாசல் திரைப்படமும் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
Listen News!