விஜய் டிவியில் மதியம் முதல் இரவு வரை பல சூப்பர் ஹிட்டான சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் செல்லம்மா.
கணவனின் துரோகத்தால் தனிமையில் மகளுடன் வாழும் பெண் எதிர்கொள்ளும் போராட்டங்களை இந்த சீரியல் எமுத்துக் காட்டுகின்றது. செல்லம்மாவாக அன்சிதாவும் சித்து என்னும் காரக்டரில் அர்னவ்வும் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேகா மற்றும் சித்துவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து விட்டது. திருமணம் நடைபெறவுள்ள நேரத்தில் ஒரு குழந்தை வந்து அம்மா என்று அழைக்கின்றது. இதனால் மேகா ஏற்கனவே திருமணம் முடித்தவரா என்ற குழப்பம் ரசிகர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மேலும் சித்து செல்லம்மாவை காதலித்து வரும் நிலையில் மேகா பற்றிய முழு உண்மைகளும் தெரிந்தால் கண்டிப்பாக சித்து மற்றும் செல்லம்மாவுக்கே திருமணம் நடக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர்.இதனால் அடுத்து நடக்கப்போவதை பார்ப்பதற்காக அனைவரும் ஆவலாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!