• Sep 20 2024

திருமணமாகி 8ஆண்டுகள் கழித்து... கர்ப்பமாக இருக்கும் ப்ரியாவிற்கு.. இந்தளவு பெரிய மகன் இருக்காரா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவர் அட்லி. இவருக்கும் நடிகை கிருஷ்ண ப்ரியாவுக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடந்தது. திருமணமாகி 8ஆண்டுகள்  ஆகியும் இதுவரை காலமும் குழந்தை இல்லாமல் தவித்து வந்தனர்.


இந்நிலையில் தற்போது ப்ரியா கர்ப்பமாக இருக்கிறார். அதாவது ப்ரியாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தான் அப்பாவாகும் நல்ல செய்தியை மகிழ்ச்சியுடன் அறிவித்தார் அட்லி. அதில் "நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம். இந்த பயணத்தில் எங்களுக்கு உங்களின் ஆசியும், பிரார்த்தனையும் தேவை" என்று அட்லி தெரிவித்தார். 

அதைப் பார்த்த பலரும் அட்லிக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை போல, அதனால் தான் நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் எனக் கிண்டலடித்தார்கள். ஆனால் அவர் தெரிந்து தான் அப்படி குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனைத் தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் ப்ரியாவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தான் தற்போது ப்ரியாவின் முதல் குழந்தை, அதுவும் வளர்ந்த குழந்தை பற்றி பேசப்படுகிறது. 

அதாவது ப்ரியாவும், அவரின் சகோதரர் சதீஷும் இரட்டையர்கள். அவர் தன் சகோதரர் சதீஷை தான் இத்தனை காலமாக தன் முதல் குழந்தையாக கருதுகிறார். அது பற்றி தான் சமூக வலைதளவாசிகள் பலரும் பேசி வருகிறார்கள்.


அந்தவகையில் "இரட்டையர்களுக்கு இடையேயான பாசம் ஸ்பெஷலானது. அதனால் நீங்கள் சதீஷை உங்களின் முதல் குழந்தையாக நினைப்பதில் ஆச்சரியம் இல்லை. சதீஷ் கொடுத்து வைத்தவர். உங்களுக்கு இரட்டையர்கள் பிறந்தால் நன்றாக இருக்கும். இரட்டை குழந்தைகளோ, ஒரு பிள்ளையோ, எதுவாக இருந்தாலும் நல்லபடியாக பிறந்தால் போதும். உடம்பை பார்த்துக்கோங்க" ப்ரியா எனக் கூறி ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement