மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி கடந்தாண்டு வெளியாகி 500கோடி வசூலை வாரிக் குவித்த ஒரு வரலாற்றுக் கதையம்சம் கொண்ட திரைப்படம் தான் 'பொன்னியின் செல்வன்'. இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது. இப்படமானது ஓரளவிற்கு சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ள நிலையில்,கடந்த 28-ஆம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியது. இருப்பினும் இந்தப் படமானது முதல் பாகத்தைப் போன்று எதிர்பார்த்த அளவிற்கு வசூலைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
அந்தவகையில் இதுவரை பொன்னியின் செல்வன்-2 உலகளவில் ரூ. 335 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் ரூ. 132 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ஆனாலும் தமிழக வசூலானது விஜய்யின் வாரிசு படத்தோடு ஒப்பிடும் போது குறைவாகவே காணப்படுகின்றது.
அதாவது இன்னும் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்தால் மட்டுமே தமிழகத்தில் வாரிசு படத்தின் வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் 2 படத்தால் முறியடிக்க முடியாது எனக் கூறப்படுகின்றது.
Listen News!