தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் சத்தியராஜ். இவருடைய தாயார் வயது மூப்பு மற்றும் இருதய நோய் காரணமாக கோவை பந்தையசாலை பகுதியிலுள்ள கே.ஜி.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் இறப்புக்குள்ளானார்.
இவரது உடல் பந்தையசாலை பகுதியிலுள்ள,சத்தியராஜ் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.அத்தோடு ஞாயிற்றுக்கிழமை உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளர். தனது தாயார் இறந்த செய்தியைக் கேட்ட சத்தியராஜ் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்து நேற்றிரவு வீடு திரும்பியுள்ளார்.
சத்யராஜின் தங்கை வெளிநாட்டில் இருப்பதால், அவர் வந்த பின்னரே, இறுதி சடங்கு செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு இறுதி சடங்கு செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், ஆவாரம்பாளையம் மின் மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நாதாம்பாளுக்கு சத்யராஜ் ஒரே மகனாவார். கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். கல்பனா சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.அத்தோடு சத்தியராஜின் தாயின் மறைவிற்கு கமல்ஹாசன் ஆகியோர் தங்களின் இரங்கல்களை தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!