• Sep 20 2024

யாரும் நம்பி ஏமாந்துடாதீங்க.. கோரிக்கை வைத்து விஷால் மேனேஜர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் ஆரம்பத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான சண்டைக் கோழி ,தாமிர பரணி ,திமிரு, பூஜை ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றிருக்கின்றது.இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய வீரமே வாகை சூடும் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

மேலும் இவர் தென்னிந்திய சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் நடிகர் சங்கப் பொருளாளர் என பல்வேறு திறமைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஷால்.

இந்த நிலையில் நடிகர் விஷாலின் மேனேஜரான ஹரி கிருஷ்ணா அவர்களின் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரது கணக்கில் இருந்து எனக்கு உடனடியாக பணம் தேவைப்படுகிறது என பலருக்கு மெசேஜ் சென்றுள்ளது.

இதனை அறிந்த ஹரி கிருஷ்ணா உடனே ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். மேலும் தன்னுடைய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. தயவுசெய்து இந்த கணக்கில் இருந்து வரும் மெசேஜ்களை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்த இவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement