தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார்,தற்பொழுது ரஜினியை வைத்து ஜெயிலர் என்னும் படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் இவருடன் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, கன்னட நடிகர் சிவராஜ் குமார், யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் 70 சதவீதப்பணிகள் முடிந்துள்ளதால், அனேகமாக ஏப்ரல் மாதம் படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதில் ஜெய்லராக நடித்துள்ளதாகவும், ஜெயிலில் இருந்து சில கைதிகள் தப்பிக்க முயற்சி செய்கின்றனர். அதை ரஜினி தடுத்து நிறுத்தவே அவருக்கும் வில்லன்களுக்கும் மோதல் வெடிக்கின்றது. அதன் பிறகு நடப்பதே படத்தின் ஜெயிலர் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
நெல்சனின் முந்தைய படங்களைப் போல டார்க் காமெடி படமாக இல்லாமல் இப்படம் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் ஜெயில் போலவே பிரம்மாண்ட செட் போடப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதல் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் நான்காம் காட்டப்படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெற உள்ளதால், அதில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, ஐ லவ் யூ தலைவா என ஓடி வந்த ரசிகர், ஒருவரை எல்லா இடத்துக்கும் வராதீங்க... போய் வேலைய பாருங்க வேலைதான் முக்கியம் என்று கைகளை அசைத்தபடி கண்டிப்புடன் கூறியுள்ளார்.
ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயரிக்க உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் பூஜை கடந்த நவம்பர் மாதம் போடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!