• Sep 20 2024

இந்த மாதிரிப் பண்ணாதீங்க ப்ளீஸ்... கணவரின் இறப்பிற்கு மத்தியில்... கண் கலங்கி வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை ஸ்ருதி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'நாதஸ்வரம், பாரதி கண்ணம்மா, வாணி ராணி' எனப் பல சீரியல்களிலும் நடித்துப் பிரபலமான நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் நேற்றையதினம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே ஆன நிலையில் இவரின் இறப்பு பலரிற்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் கணவனின் இறப்பிற்கு மத்தியில் நடிகை ஸ்ருதி இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றினை வெளியிட்டு யூட்யூப் சானல்கள், ஊடகங்களுக்கு கனிவான கோரிக்கை ஒன்றினை முன்வைத்து இருக்கின்றார்.


அந்தவகையில் ஸ்ருதி அந்த வீடியோவில் கூறுகையில் "என் கணவர் அரவிந்தோட இறப்புக்கு நிறைய பேர் நேர்ல வந்தும் ஃபோன்ல மெசேஜ் பண்ணியும் விசாரிச்சிங்க, எங்களுக்கு நிறைய பலம் கொடுத்தீங்க. அரவிந்த என்கூடவே எப்பவும் இருக்காரு, அவர் என்ன விட்டு போக மாட்டாரு. இந்த மாதிரி நேரத்துல நான் இப்படி வீடியோ ரெக்கார்ட் போடுவதற்கான காரணம், நிறைய யூடியூப் சேனல்கள் நிறைய தேவையில்லாத தகவல்கள பரப்பிட்டு இருக்கீங்க, உங்களுக்கு தகவல் தேவைப்பட்டா நான் பேசறத எடுத்து போட்டுக்கோங்க, தெரியாத தகவல பரப்பாதீங்க. இதனால் என் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகுறாங்க" என்றார்.


அதுமட்டுமல்லாது "எல்லா யூட்யூப் சேனல்கள், ஊடகங்களையும் கேட்டுக்கிறேன், அவர் மாரடைப்பு இறந்துட்டாரு. அதத் தாண்டி ஜிம் ட்ரெய்னர், பாடி பில்டர், ஜிம்ல ஒர்க் அவுட் பண்ணும்போது இறந்துட்டாரு அது இதுனு பொய்யான விஷயங்களை எழுதாதீங்க. அவர் ஒரு சிவில் இஞ்சினியர். உடலை கட்டுக்கோப்பாக பேணுவதில் ஆர்வம் கொண்டவர், அவ்வளவுதான்" என்றார்.

மேலும் "நாங்கள் அவர் இறப்ப தாண்டி அடுத்த விஷயங்கள செஞ்சிட்டு இருக்கோம். யூட்யூப் சேனல்கள் இந்த மாதிரியான விஷயங்கள் பரப்ப வேண்டாம். இது தான் என் கோரிக்கை. வீட்டில் எல்லரும் வயசானவங்க.. நாங்க தான் குடும்ப உறுப்பினர்கள தாங்கிட்டு இருக்கோம். நீங்க பகிரும் தேவையற்ற போலித் தகவல்கள் நிச்சயமாக எங்களை அழித்துவிடும். இது எங்களுக்கு அதிக வேதனையையும் தருது" எனவும் கண் கலங்கியவாறு கூறியுள்ளார் நடிகை ஸ்ருதி.


Advertisement

Advertisement