ஒரே குடும்பத்தில் இருந்து வந்தாலும் தங்களது திரைப்பயணத்தை மிகவும் சக்சஸ்புல்லாக மெயின்டெயின் செய்து முக்கிய நடிகர்கள் தான் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்களில் கார்த்தி விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் இவரின் விருமன் படத்தை சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்துள்ளார். அடுத்த மாதத்தில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இது தவிர பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ம் தேதியும், சர்தார் படம் தீபாவளி ரிலீசாகவும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று படங்களும் வெவ்வேறு ஜானர்களில் வெளியாகவுள்ளது. இவை கண்டிப்பாக ரசிகர்களுக்கு சிறப்பான ட்ரீட்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
இதனிடையே நடிகர் கார்த்தி நெகட்டிவிட்டி குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெகட்டிவிட்டியை வைத்தே தற்காலங்களில் அனைவரும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள நினைப்பதாக அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
என்ன பிடிக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டாலும், எது பிடிக்காது என்பதையே நாம் முன்னிலைப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். ஒரு விஷயத்தை பிடிக்கவில்லை என்று ஹைலைட் செய்து பேசும்போது தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள அனைவரும் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்
- தனுஷே ஒரு சூப்பர் ஹீரோ தான்”- தி கிரே மேன்” பட இயக்குநர்களான ருஸ்ஸோ பிரதர்ஸ் கொடுத்த விசேட பேட்டி
- சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருதை தட்டித்தூக்குவாரா சூர்யா…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!