• Sep 20 2024

தப்பே செய்யல, என்னை நடுரோட்டில் நிற்க வைத்து கல்லால் அடியுங்க- சர்ச்சையைக் கிளப்பிய மன்சூர் அலிகான்

stella / 9 months ago

Advertisement

Listen News!

கோலிவுட்டில் கடந்த வாரம் முழுக்க தலைப்பு செய்தியாக இருந்தது மன்சூர் அலிகான். சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்திருந்த அவர், “லியோ படத்தில் த்ரிஷாவுடன் பெட்ரூம் காட்சி, பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சி இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் இல்லை.

குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் தூக்கிப்போட நினைத்தேன். அதுவும் நடக்கவில்லை” என பேசியிருந்தார்.இவரின் இந்த பேச்சுக்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்திருந்தார்.அதன்படி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் த்ரிஷா கூறியதாவது,”மன்சூர் அலிகானின் பேச்சு அருவருக்கும் வகையில் இருக்கிறது.. பெண்களுக்கு எதிரானதாக இருக்கிறது. அவர் என்னுடன் நடிக்க ஆசைப்படட்டும். இனி நான் அவருடன் நடிக்கவேமாட்டேன். அவர் மனித குலத்துக்கே இழுக்கு” என தெரிவித்திருந்தார்.


இதனால் பிரபலங்கள் பலரும் மன்சூர் அலிகானின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதனால் மன்சூர் அலிகான் த்ரிஷாவிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் அதற்கு த்ரிஷா மன்னித்து விட்டதாகவும் கூறப்பட்டது. இதனால் இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்றைய தினம் மன்சூர் அலிகான்  நான் மன்னிப்பு கேட்கவில்லை. தொலைபேசியில் மரணித்துவிடு என்று சொன்னதை மன்னித்து விடு என்று மக்கள் தொடர்பாளர் தவறாக புரிந்து கொண்டார் என கூறியிருந்தார்.


இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தப்பே செய்யாத நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த வீடியோவை முழுசா ஒருமுறை பாருங்க, அதுல நான் தப்பா பேசி இருந்தா என்னை நடுரோட்டில் நிற்கவைத்து கல்லால் அடிங்க. மேலும் காவல்நிலையத்திற்கு சென்று சில கேள்விகளுக்கு பதில் அளித்தேன் வீட்டிற்கு வந்ததும், நைட் தூக்கம் வரவில்லை. 


இதனால், பார்த்திபன் ஸ்டைலில் ஒரு அறிக்கையை என் பிஆர்ஓவிடம் தொலைபேசியில் சொன்னேன். மேலும், சக நடிகை த்ரிஷாவின் கடந்த கால வாழ்க்கை குறித்து பல செய்தி வெளிவருகிறது. அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஒரு நடிகை தவறு செய்தால், அதில் ஹீரோக்களுக்கும் பெரும் பங்கு இருக்கு என்பதால், த்ரிஷா என்னை மரணித்துவிடு என்றுதான் சொன்னேன். ஆனால், அது மன்னித்துவிடு என்றாகி விட்டது என்று சொல்லி சிரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement