பிக் பாஸ் பத்தாவது வாரத்தில் மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.இதில் இந்த வாரம் நாமினேஷனில் அசீம், மணிகண்டன், ஏடிகே, ஜனனி, விக்ரமன், ரக்ஷிதா ஆகியோர் நாமினேஷனில் சிக்கினார்கள். அதில் குறைந்த வாக்குகளை பெற்று ஏடிகே வெளியேறி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
ஆனால் தற்பொழுது வெளியாகிய தகவலின் படி ஜனனி தான் வெளியாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஜனனி ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.
மேலும் இந்த நிலையில் இந்த வாரம் நடந்த சொர்க்கமா? நரகமா? டாஸ்க்கில் விக்ரமன் முதலாவதாக சொர்க்கத்திற்கு வந்தும் ஜனனி தானே முதலாவதாக வந்ததாக கூறினார். இதற்கு கமல்ஹாசனும் குறும்படம் போட்டுக் காட்டி விக்ரமன் தான் முதலாவதாக வந்ததாக உறுதிப்படுத்தினார்.
மேலும் இதில் ஜனனிக்கு ஆதரவாக அசீம் பொய்யாக குரல் கொடுத்தது குறித்து ஷிவின் விக்ரமனுக்கு ஆதரவாக அசீமுடன் சண்டை பிடித்துள்ளார். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதைக் காணலாம்.
Listen News!