• Sep 21 2024

சமந்தாவை பத்தி பேசாதீங்க…கடுப்பான நாக சைதன்யா!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சமந்தா மற்றும் நாக சைதன்யா பல வருட காதலுக்கு பின் திருமணம் செய்துகொண்ட நிலையில் திடீரென கடந்த வருடம் விவகாரத்து செய்வதாக அறிவித்தது ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தியது. அதன் பிறகு சமந்தா மீது தப்பா? நாக சைதன்யா இன்னொரு பெண்ணை காதலிக்கிறாரா? என ஏகப்பட்ட வதந்திகள் பரவியது.

ஆனால், கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆக உள்ள நிலையில், இருவருமே அடுத்ததாக யாருடனும் டேட்டிங் செல்வது போல எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

மேலும் இருவரும் தொடர்ந்து தனியாகவே தங்களது சினிமா பயணத்தை நோக்கி பயணித்து வருகின்றனர். மனைவி சமந்தா பாலிவுட்டில் சாதித்த நிலையில், தானும் பாலிவுட்டில் பெரிய சாதனை படைக்க வேண்டும் என அமீர் கான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் நாக சைதன்யா.

இந்நிலையில், சமீபத்தில் நாக சைதன்யா அளித்த ஒரு பேட்டியில், என்னுடைய சினிமா மற்றும் என் உழைப்பை பற்றி யாரும் பெரிதாக பேசுவதாக தெரியவில்லை. அத்தோடு இத்தனை மாதங்கள் ஆகியும் என்னுடைய சொந்த வாழ்க்கைப் பற்றிய கூச்சல்களே அதிகம் ஒலித்து வருகின்றன.

ஆனால், அதைப் பற்றியெல்லாம் எனக்கு எந்த கவலையும் இல்லை, இதே வாய் நாளைக்கு என் படங்களையும் என் உழைப்பையும் பற்றி பெருமையாக பேசத் தான் போகின்றனர், அதற்காக எப்போதுமே கடுமையாக உழைப்பேன் என பேசியுள்ளார்.

நடிகர் அமீர் கானின் லால் சிங் சத்தா படத்தில் முதலில் இந்த ராணுவ வீரர் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய்சேதுபதியைத் தான் அமீர்கான் அணுகியிருந்தார். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக விஜய்சேதுபதி அந்த படத்தில் நடிக்கவில்லை. இந்நிலையில், அந்த வாய்ப்பு நாக சைதன்யாவுக்கு கிடைத்துள்ளது. அத்தோடு வரும் ஆகஸ்ட் 11ம் தேதி லால் சிங் சத்தா வெளியான பிறகு பலரும் தன்னை அந்த படத்திற்காக பாராட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement