• Sep 20 2024

எப்போ பார்த்தாலும் பெட்ரூம் பத்தியே பேசுற அறிவில்லையா?- பயில்வானை போட்டுத் தாக்கிய பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  காமெடி மற்றும் குண்சித்திர வேடங்களில் நடித்து மிகவும் பிரபல்யமானவர் தான் பயில்வான் ரங்கநாதன்.ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமா துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் யூடியூப் தளத்தில் பகிர்ந்து வருகிறார்.

இதனால் பல எதிர்ப்புக்களையும் அடிக்கடி சந்தித்து வருகின்றார்.அந்த வகையில் தயாரிப்பாளரான  கே. ராஜன், மீனா கணவரின் இறப்பு குறித்து பயில்வான் பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டி கொண்டனர்.


இந்நிலையில் 'கட்சிக்காரன்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதையொட்டி பத்திரிகையாளர்கள் சந்திப்பும் நடத்தப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த தயாரிப்பாளர் ராஜன் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, குறுக்கிட்ட ரங்கநாதன் தன்னை தகாத வார்த்தையால் ராஜன் பேசியதாக கூறினார்.

உடனே ராஜன், ‘உங்களுக்கு பதில் சொல்ல நான் இங்கு வரவில்லை. உனக்கு பதில் சொல்ற இடம் இது இல்ல. வா தனியா பேட்டி வச்சுக்கலாம். ரெண்டு பேரும் பேட்டி வச்சுக்கலாம். அங்க வாங்க. இந்த மேடை தயாரிப்பாளர் போட்ட மேடை. எல்லாமே ஓசிக்கு வேண்டாம். உன்னையப் பத்தி எப்போ பேசினேன்? நீ ஒவ்வொரு தாய்மார்களையும் கேவலப்படுத்திட்டு இருக்க.ஒவ்வொரு நடிகைகள கேவலப்படுத்திட்டு இருக்க. பெட்ரூம் பத்தியே பேசுற. இந்த மிரட்டல் எல்லாம் வேற ஆளுக்கிட்ட வச்சுக்க’ என்று கூறினார். 


இதனால் கே. ராஜனுக்கும், பயில்வான் ரங்கநாதனுக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்தது. கடைசியாக அங்கிருந்தவர்கள் ரங்கநாதனை சமாதனப்படுத்தி வெளியில் அனுப்பி வைத்தனர். நிகழ்ச்சி மேடையிலே கே. ராஜனும், பயில்வானும் மோதிக்கொண்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை கிளப்பி வருகிறது.






Advertisement

Advertisement