யாரும் எதிர்பாராத விதமாக நடிகை மீனாவின் கணவரான வித்யாசாகர் கடந்த மாதம் 28ஆம் தேதி நுரையீரல் பிரச்சினை காரணமாக உயிரிழந்தார். இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனெனில் நடிகை மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் கடந்த 2009ம் ஆண்டு தான் திருமணம் நடை பெற்றது.
இவர்களுக்கு நைனிகா என்னும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இளம் குடும்பமாக வலம் வந்த இவர்களது வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டது மகிவும் கடினமான ஒன்றாகவே உள்ளது. மேலும் நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்
பெங்களூருவில் அவருடைய வீட்டுக்கு அருகே நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட அலர்ஜி சுவாசப் பிரச்சனையாக மாறியுள்ளது. இந்நிலையில் வித்யாசாகர் இறந்து ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில், மீனா மீண்டும் படப்பிடிப்புக்கு வந்து விட்டதாக கூறி, பழைய விளம்பர படப்பிடிப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சிலர் சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.
ஆனால் உண்மையில் இந்த வீடியோ கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த விளம்பர படப்பிடிப்பில் மீனா கலந்து கொண்டது என்பதும் அதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் .இந்நிலையில் மீண்டும் அவரைப்பற்றி வதந்திகள் பரவுவது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மீனா அவ்வளவு சொல்லியும் புரியலையா? என நெட்டிசன்கள் கோபமாக கமெண்ட் அடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- கார்த்தியின் கிண்டல் டுவிட்டுக்கு ஸ்மார்ட்டாக பதிலடி கொடுத்த த்ரிஷா
- வாரியார் என்ற டைட்டில் சொன்னவருக்கு ஒரு லட்சம் ரூபாயை வழங்கிய இயக்குநர் லிங்குசாமி
- AK61 படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபல நடிகர்- ஷுட்டிங்கில் இருந்து வெளியாகிய லேட்டஸ்ட் போட்டோ
- எனக்கு சொந்தமாக வீடு கார் இல்லாமல் இருக்கலாம்-பொது மேடையில் கண்கலங்கிய இயக்குநர் லிங்குசாமி
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!