துல்கர் சல்மான் ஒரு இந்திய நாட்டு நடிகர். இவர் மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் ஆவார். இவர் செக்கண்டு சோவ் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் வந்த சீதா ராமம் என்ற டப் திரைப்படத்தின் மூலம் பெருமளவில் மக்கள் மனதை கவர்ந்து விட்டார். அந்த அளவிற்கு இவரின் நடிப்பு காணப்பட்டது. இந்த படத்தின் மூலம் இளம் பெண்களை அதிகமாகவே கவர்ந்துள்ளார்.
இவர் நடித்திருந்த ஒரு ஹிந்தி திரைப்படத்திற்கான விருது இவருக்கு வழங்கப்படுள்ளது. இந்த திரைப்படத்தில் இவர் நெகடிவ் ரோலில் நடித்துள்ளார். இதுவே இவரின் முதல் ஹிந்து படத்திற்கான விருது என்று இவர் கூறியுள்ளார்.
சல்மான் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் இதை தெரிவித்திருந்தார். மேலும் இவர் பல்கி சார் உங்களுக்கு நன்றி என்றும் தெரிவித்திருந்தார். படக்குழு அனைவருக்கும் எனது நன்றிகள் என்று கூறியிருந்தார். இவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
Listen News!