விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.
அதில் ஜெனிக்கு கோலாகலமாக வளைகாப்பு நடக்கின்றது. அவருக்கு குடும்பத்தார் முகத்தில் மஞ்சள் பூசி, வளையல் அணிவித்து ஆசீர்வதிக்கின்றனர். அப்போது பழனிச்சாமி குறும்புக்கு செழியன் முகத்தில் மஞ்சள் பூசுகின்றார்.
மேலும் கோபி, பாக்கியா உட்பட அனைவரும் ஜெனியை ஆசீர்வதிக்கின்றனர். இதனைப் பார்த்த ஈஸ்வரி கண் கலங்கி நிற்கின்றார்.
பின்னர் ஜெனி அனைவருக்கும் கை காட்டி விட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கின்றார்.
இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!
Listen News!