• Sep 21 2024

பாக்கியாவை திட்டிய ஈஸ்வரி.. நக்கல் அடித்த ராதிகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் எழில், அமிர்தா, ஜெனி, ஈஸ்வரி, ராமமூர்த்தி, பாக்கியா என எல்லோரும் நிலா பாப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்க ஈஸ்வரி எழிலுக்கும் அமிர்தாவுக்கும் கல்யாணம் ஆகி 6 மாதம் ஆகுது, இன்னும் விசேஷம் இல்லையா என கேட்டு சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ள சொல்கிறார்.

எழில் அதான் எங்களுக்கு ஏற்கனவே குழந்தை இருக்கே என்று சொல்ல ஈஸ்வரி உங்களுக்குனு ஒரு குழந்தை வேணாமா? குழந்தை பிறந்தா தான் ஒரு பிடிப்பு இருக்கும் என சொல்கிறார். பாக்கியா எழில் படம் பண்ணனும், நல்ல நிலைமைக்கு வரணும் என சொல்ல ஈஸ்வரி சீக்கிரம் குழந்தை பெத்துக்க கண்டிஷன் போட அமிர்தா முகம் மாறி ரூமுக்குள் சென்று விடுகிறார்.

பிறகு எழில் அமிர்தாவிடம் சாரி கேட்டு சமாதானம் செய்ய அமிர்தா பாட்டி அவங்க மனசுல பட்டதை சொல்லிட்டாங்க, விடுங்க என சொல்ல இனிமே இந்த வீட்ல யாரும் இப்படி பேச மாட்டாங்க, அதுக்கு நான் ப்ராமிஸ் பண்றேன் என சொல்கிறார். மேலும் நிலா தான் நம்முடைய பொண்ணு என பேசுகிறார்.

இதையடுத்து பாக்கியா ஈஸ்வரியிடம் சென்று நீங்க இப்படி சொல்லி இருக்க வேணாம் என பேச ஈஸ்வரி கோபம் அடைகிறார். என்ன தான் இருந்தாலும் நிலா எழில் பொண்ணு இல்ல, நாமும் அவ மேல முழுசா உரிமை கொண்டாட முடியாது என்று சொல்ல ஆவேசமாக பேச இதை ராதிகா கேட்டு விடுகிறார்.

முகம் சோகமாக பாக்கியா வெளியே வர ராதிகா உங்க X மாமியார் திட்டுனதை பாக்கும் போது குளுகுளுனு இருக்கு என சொல்லி நக்கல் அடிக்க அந்த நேரம் ஈஸ்வரி கிச்சனுக்கு வந்து இன்னும் எவ்வளவு நேரம் தான் வேலை பார்ப்ப? போய் தூங்குமா என அக்கறையாக பேச பிறகு பாக்கியா ராதிகாவுக்கு பல்பு கொடுக்கிறார்.

அடுத்து ரூமில் கோபி இனியாவுக்கு பாடம் சொல்லி தர மயூ லைட் ஆஃப் பண்ணா தான் தூக்க வரும் வர சொல்ல கோபி அக்கா படிக்கணும்டா என சொல்லி படுத்து தூங்க சொல்ல மயூ படுத்து தூங்க ராதிகா கடுப்பாக உள்ளே நுழைகிறார். இவ்வளவு வெளிச்சத்துல மயூ எப்படி தூங்குவா என ராதிகா கேட்க கோபி இனியா படிக்கணும், இது +2 எக்ஸாம், அவ லைஃப் தீர்மானிக்க போற எக்ஸாம் என கிளாஸ் எடுக்க ராதிகா இன்னும் கடுப்பாகி படுத்து விடுகிறார்.

வேண்டுமென்றே கை போடுவது போல கோபியின் தொடையில் வேகமாக அடித்து அவரை அலற விடுகிறார். கோபிக்கும் தூக்கம் வர போதும் என இனியாவிடம் சொல்ல அவர் 12 மணி வரை படிக்கணும் என சொல்கிறார்.

ஏற்கனவே 11.30 மணியாவதை பார்த்த ராதிகா 12 மணி வரை லைட் ஆஃப் பண்ண மாட்டாங்க என்பதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement