சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் குணசேகரன் வீட்டை விடடு வெளியேறிவிட்டார். இதனால் எப்போது மீண்டும் வீட்டுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் குடும்பத்தில் இருப்பவர்கள் இருக்கின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பது குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.அதில் எல்லோரும் இருந்து பேசிட்டு இருக்கும் போது நந்தினி குணசேகரன் இங்க தான் எங்கையோ இருந்து எங்களை வேவு பார்த்திட்டு இருக்காரு என்று சொல்கின்றார். அப்போது ஜனனி எப்படியாவது அவரை வர வைக்கனும் என்கின்றார்.
அப்போது குணசேகரனின் மகன் கதிரிடம் எங்களால தான் அவரு போனாரு என்று சொல்லுறீங்க தானே, நாங்களே போய்க் கூட்டிட்டு வருகின்றோம் என்று சொல்கின்றார்.அப்போது கதிர் தாடிக் காரன் உங்க அப்பனாக இருந்தால் நல்லா இருக்கும் என்று சொன்னீங்க தானே என்று கேட்கின்றார்.
அப்போது ஈஸ்வரி அவங்க ஆதங்கத்தில சொல்லிட்டாங்க என்று சொல்ல கதிர் தப்பாக பேசுகின்றார். இதனால் ஈஸ்வரி ஓங்கி ஒரு அறை விடுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!