சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சீரியலின் கதைப்படி அதில் ஜீவானந்தத்தின் வீட்டைத் தேடி அடியாட்களுடன் கதிர் சென்றதால் பெரிய பிரச்சினை நடந்தது. அத்தோடு எதிர்பாராத விதமாக ஜீவானந்தத்தின் மனைவியும் பாதிக்கப்பட்டு விட்டார். ஜனனியும் ஜீவானந்தத்தின் வீட்டிற்கு வந்ததால் கதிர் தனது வீட்டிற்கு வந்து விட்டார்.
இப்படியான நிலையில் நளைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஜனனி வீட்டுக்கு வந்து அண்ணிமாரிடம் ஜீவானந்தத்தின் வாழ்க்கையின் மறுபக்கத்தில் இப்பயொரு கதை இருக்கும் என்று எதிர்பார்க்கல என்று சொல்கின்றார்.
அப்போது நந்தினி இவ்வளவு நல்லவராக இருக்கிறவர் ஏன் தான் சொத்தை தன்னுடைய பெயரில் மாத்தி எழுதினாரு என்று கேட்க ஜனனி இதில் ஏதோ காரணம் இருக்கு, அவரை அடிக்க வந்தவங்களால் அப்போ அவருடைய மனைவி தான் பாதிக்கப்பட்டிட்டாங்க என்று சொல்ல ஈஸ்வரி அழுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!