சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியவாறு அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது.அதாவது ஜீவானந்தம் குணசேகரினன் சொத்தை அபகரித்ததால் அந்த சொத்தை எப்படி மீட்பது என்று தெரியாமல் குணசேகரன் தவிக்கின்றார்.
இதனால் குணசேகரனுக்கு நெஞ்சுவலி வந்ததோடு குணசேகரனை ஹாஸ்பிட்டலில் கதிரும் கரிகாலனும் கொண்டு போய் சேர்த்திருந்தனர். இப்படியான நிலையில் தற்பொழுது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் குணசேகரனின் நிலை மோசமாக இருப்பதால் நந்தினி நாம எப்படியாவது ஜீவானந்தத்திடம் உருண்டு பிரண்டு சொத்தை மீட்டுக் கொண்டு வந்தால் தான் இவர் எழுந்து கொள்வார் போல இருக்கே என்று சொல்ல ஈஸ்வரியும் அது தான் சரியாக இருக்கும் என்று, வா ஜனனி போகலாம் என்று சொல்ல ஜனனி யோசிக்கின்றார்.
மறுபுறம் கரிகாலன் குணசேகரன் இறந்து விடுவார் போல இருக்கே என்று நினைத்து ஐஸ்வண்டி எடுத்துக் கொண்டு வரவா என்று கேட்க கதிர் காலால் கரிகாலனை அடிக்கின்றார். பின்னர் டாக்டர் வந்து குணசேகரனின் கண்டிஷன் பற்றி சொல்கின்றார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!