அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய தினம் என்ன நிகழவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது.
அதில் குணசேகரன் ஞானத்தைப் பார்த்து "தம்பி வாப்பா போகலாம்" என வீட்டை விட்டுப் போக கேட்கின்றார். அதற்கு ஞானம் கொஞ்சம் இருங்க எனக்கூறி குணசேகரனை தடுக்கின்றார். பதிலுக்கு குணசேகரன் "அதுதான் அப்பத்தா தெளிவா சொல்லிட்டாங்களே பேசுற காலம் போய் கேட்கிற காலம் வந்திடிச்சு என்று, யாருக்கு எப்ப என்ன காலம் வருது என்று பார்க்கலாம்" எனக் கூறிச் செல்கின்றார்.
மறுபுறம் ஆடிட்டருடன் குணசேகரன், கதிர் பேசுகின்றனர். அப்போது வக்கீல் "அடுத்த ஆதி எப்படி வைக்கப்போறாங்க என்று தெரியாமல் அதற்கு ரியாக்ட் பண்ணுறது ரொம்ப கஷ்டம்" என குணசேகரனிடம் கூறுகின்றார்.
அதற்கு குணசேகரன் "இப்போ என்ன செய்யலாம் என்று சொல்லுங்க, அந்தக் கிழவியை போட்டுத் தள்ளிடலாமா" எனக் கேட்கின்றார். இதனைக் கேட்டதும் கதிர் உட்பட ஆடிட்டர், வக்கீல் என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
Listen News!