• Sep 21 2024

1500 திரையரங்கில் பிரமாண்டமாக வெளியாகும் யானை- அப்படி திரில்லர் படமா இது?

stella / 2 years ago

Advertisement

Listen News!

முறை மாப்பிளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். தொடர்ந்து இயற்கை, மலை மலை போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானார்.

பின்னர் சினிமாவிலிருந்து விலகி மீண்டும் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் வில்லனாக சினிமாவிற்கு ரீ-என்ரி கொடுத்தார்.தொடர்ந்து குற்றம் 23, தடம், சாஹோ போன்ற படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாக வலம்வருகின்றார்.

இந்நிலையில் அருண்விஜய் தனது 33வது படமான யானை திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் ஹரி இயக்கியுள்ளார். மேலும்,சமுத்திரக்கனி,யோகி பாபு,சினேகன்,ராதிகா, கங்கை அமரன் மற்றும் கேஜீஃப் புகழ் கருடா உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அந்தவகையில் திரைப்படம் மே 6 வெளியாகவுள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது,இருப்பினும் தடைப்பட்டுள்ளது.இந்நிலையில் யானை படம் ஜூலை 1 வெளியாக்குவதற்கு படக்குழுவினர் பிளான் செய்தனர்.இத்திரைப்படத்திற்காக UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை அருண் விஜய்யின் படங்கள் ரிலீஸாகாத அளவுக்கு இன்று மிகப் பிரமாண்டமாக "யானை" திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. 1500 திரைகளில் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement