பிக்பாஸ் நிகழ்ச்சி, அடுத்தடுத்து விறுவிறுப்பு நிறைந்த டாஸ்க்குகள் மற்றும் நிகழ்வுகளால் சென்று கொண்டிருக்கிறது. எப்போது எந்த சம்பவம் நடைபெறும் என்பதை சில நேரம் யூகிக்க முடியாத அளவுக்கு பரபரப்பு சம்பவங்கள் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறும். இதனால் ரசிகர்கள் கூட இந்த நிகழ்ச்சியை மிகவும் ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் 38வது எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்...
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் விதவிதமான டாஸ்க்குகள் வழங்கப்படும். அவ்வகையில் இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறி இருக்கிறது,. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரத்தை எற்றுள்ளனர். அவ்வகையில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரச்சிதா, படைத்தளபதியாக அசீம், அரசவை ஆலோசகராக விக்ரமன், இளவரசராக மணிகண்டா ராஜேஷ், இளவரசியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு எல்லோரும் செந்தமிழில் பேச வேண்டும் என கூறப்பட்டது.இதன் படைத்தளபதி அசீம் தான் இருந்தார்.அவர் ராஜா ராணிக்கு கொடுக்கும் சாப்பாட்டை அவர் செக் பண்ணி கொடுக்க வேண்டும்.ஆனால் சிவின் என்ன செய்து விட்டார் எண்டால் ராணிக்கு கொடுக்கும் சாப்பாட்டில் உப்பை கலந்து விட்டார்.இதனால் பிக்பாஸ் வீட்டுக்குள் பெரிய சண்டையே வெடிக்கின்றது.
அதாவது படைத்தளபதி அதைச் செக் பண்ணி இருக்கனும் .அவர் செக் பண்ணாதது பிழை என்று கூறப்படுவதோடு சிவின் தான் போட்டாங்க என்பதும் கண்டுபிடிக்கப்பட்டு அவர் தண்டனையையும் ஏற்க ரெடியாக உள்ளார்.இந்நிலையில் விக்ரமன் அது படைத்தளபதியின் வேலை தான் என வாதாடுகின்றார்.ஒவ்வொருத்தர் சாப்பாடையும் நான் எச்சில் பண்ணமுடியுமா என அசீம் கேட்கின்றார்.
அதற்கு சிவின் பக்கம் நின்ற விக்ரமன் அது படைத்தளபதியின் வேலை தான் .அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என கூறுகின்றார்.இதனால் கடுப்பான அசீம் நான் செக் பண்ணினன்.ஆனால் எல்லாருடைய சாப்பாடையும் செக் பண்ண முடியாது.ஒரு பாணைக்கு ஒரு சோறு பதம் எனக் கூறியதோடு விக்ரமனை பேர்சனலாக அட்டாக் பண்ண ஆரம்பித்தார்.அதாவது எனி எல்லாருடைய சாப்பாட்டையும் நான் எச்சி பண்ணுகின்றேன் நாளையில் இருந்து உங்களுடைய சாப்பாட்டை எடுத்திட்டு வாங்க எச்சி துப்பி தாரேன் என கூறுகின்றார்.
கடுப்பான விக்ரமன் ஏன் அநாகரிகமாக பேசுகிறீங்க எனக் கேட்டதோடு ஏய் எனக்கூற கடுப்பான அசீம் வார்த்தைகளை பேச விக்ரமன் திடீரென சண்டை பிடிக்கின்றார்.அத்தோடு மாறி மாறி எல்லோரும் சண்டை பிடிக்க ஆயிஷா மற்றும் தனலட்சுமி என எல்லோரும் அசீமோடு சண்டை பிடிக்கின்றார்கள்.அதன் பிறகு எல்லோரும் தனித்தனியாக இருக்க அசீம் மற்றும் ரச்சிதாவிற்கு புதிய டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார் பிக்பாஸ்.இத்தோடு இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.
Listen News!