விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் கதாநாயகி கிராமத்தில் இருக்கிறார். அவர் எப்படியாவது தான் படித்து பெரிய அளவில் வரவேண்டும் என்று இருக்கும் நிலையில் வீட்டில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்கின்றனர்.
தனக்கு படிப்பு தான் முக்கியம் என்று வீட்டை விட்டு வெளியே வந்து கஷ்டப்பட்டு போராடி ஒரு கல்லூரியில் சேர்கிறார்.பிறகு பல பிரச்சினைகளுக்கு பிறகு படிப்பை தொடங்கும் கதாநாயகி வெண்ணிலாவிற்கு அந்த காலேஜில் ப்ரொபஷராக இருக்கும் சூரியா மீது காதல் வருகிறது. இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் காதலிக்க தொடங்கியும்போது வீட்டில் பிரச்சனை வருகிறது.
பல பிரச்சனைகளைத் தாண்டி அண்மையில் இருவரும் திருமணம் செய்து விட்டனர். இதனால் ரசிகர்களும் செம சந்தோஷத்தில் இருந்தனர். இப்படியான நிலையில் 3 வருடங்களாக சூப்பர் ஹிட்டாக ஓடும் இந்த சீரியல் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்த கிளைமாக்ஸ் சீன் தற்பொழுது படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Listen News!