• Sep 20 2024

"ஏங்க, எனக்கு எங்க அப்பா நா தாங்க பயம்"... மீண்டும் நயன்தாராவுடன் இணைந்த ஜெய்.. வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடித்த 'பகவதி' திரைப்படத்தில் துணை நடிகராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக உயர்ந்தவர் நடிகர் ஜெய். இவரது திரைப் பயணத்தில் திருப்பு முனையாக அமைந்த முக்கிய திரைப்படங்களில் ஒன்று 'ராஜா ராணி'. 


அதாவது அட்லீ இயக்கத்தில் 2013-ஆம் ஆண்டு வெளியான இப்படமானது பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதில் ரெஜினா என்கிற கேரக்டரில் நயன்தாராவும் அவரின் காதலனாக ஜெய் நடித்திருந்தார். இப்படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருந்தது. மேலும் இவர்கள் உடன் இணைந்து இப்படத்தின் ஆர்யா மற்றும் நஷ்ரியா ஆகியோரும் நடித்திருந்தனர்.


ராஜா ராணி படத்தினைத் தொடர்ந்து நயன்தாராவும் ஜெய்யும் மீண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் அந்த ஜோடி 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் இணைந்துள்ளது. 


அந்தவகையில் நயன்தாராவின் 75-ஆவது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெய் கமிட் ஆகி உள்ளார். ஜெய்யின் பிறந்தநாளான இன்று இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளது.


மேலும் இப்படத்திற்கு 'லேடி சூப்பர்ஸ்டார் 75 என' தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்குவதோடு நடிகர் சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிம்மாண்டமாக தயாரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement