இயக்குநர் நெல்சனுக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் ஜெயிலர் திரைப்படம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்த இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிஇருந்தது. ஜெயிலர் படம் ரஜினி, மற்றும் நெல்சன் இருவருக்குமே சிறந்த கம்பேக் கொடுத்துள்ளது. இதனால் படக்குழுவினர் செம குஷியில் உள்ளனர்.
மேலும் படம் வெளியான முதல் கிழமையில் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அமோகமாக குவிந்தது. இதனால் அதிக வசூலினையும் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால் சமீபத்தில் ரஜினிகாந்த் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த விடயமானது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இதனால் படம் பார்க்க செல்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. அதுமட்டுமல்லாது முதல் வாரத்தில் இருந்த வசூல் வேகமும் சற்றுக் குறைவடைந்துள்ளது. அதாவது முதல்வாரத்தில் மட்டுமே 375 கோடிக்கு மேல் வசூலைப் பெற்ற ஜெயிலர் திரைப்படம் தற்போது படம் வெளியாகி 11நாட்களைக் கடந்துள்ளது.
அந்தவகையில் இப்படம் இதுவரை 470 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது. எனவே முதல் வாரத்தோடு ஒப்பிட்டு நோக்குகையில் இரண்டாவது வாரத்தில் வசூல் சற்றுக் குறைவடைந்து கொண்டு செல்வதை அவதானிக்க முடிகிறது.
Listen News!