பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான மகாலக்ஷ்மி பிரபல தயாரிப்பாளரான ரவீந்தரை கடந்த முதலாம் தேதி திருமணம் செய்து கொண்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது கல்யாணைத்தை முடித்துள்ளனர்.
திருப்பதியில் இவர்களின் திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் புடைசூழ நடைபெற்றது. மகாலக்ஷ்மிக்கும் ரவீந்தருக்கும் இது இரண்டாவது திருமணம். மகாலக்ஷ்மிக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.
பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அத்தோடு விரைவில் சென்னையில் பிரம்மாண்டமாக ரிசெப்ஷன் நடத்த திட்டமிட்டுள்ள இவர்கள் தற்போது மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர்.
திருமணம் முடிந்ததில் இருந்து இருவரும் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடமும் வைரலாகிறது.
இப்போது கூட ரவீந்தர் மனைவியுடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.அதைப் பார்த்த ரசிகர்கள் நம்மட ரவீந்தருக்குள் இப்படி ஒரு ரொமான்ஸா என கெமண்களை அள்ளிக்குவிக்கின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..
Listen News!