• Sep 21 2024

பாக்கியா பற்றி பெருமையாகப் பேசிய ஈஸ்வரி- கடுப்பாகி கோபி செய்த காரியம்- நிலா தன்னுடைய குழந்தை என அறிந்த கணேஷ்- baakiyalakshmi Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

பாக்கியா பர்ஸை காணவில்லை என்று தேட எல்லோரும் சேர்ந்து தேடுகின்றனர். பின்னர் பாக்கியா அதில இருக்கிற பணம் போனாக் கூட பிரச்சினை இல்லை அத்தை அந்த பர்ஸ் நீங்க வாங்கிக் கொடுத்தது என்று சொல்ல, ஈஸ்வரி சரி கவலைப்படாத நான் அதே மாதிரி வேற பர்ஸ் வாங்கித் தருகின்றேன் என்று கூறுகின்றார்.


தொடர்ந்து கணேஷ் தன்னுடைய அப்பா அம்மாவிடம், எப்பிடியாவது அமிர்தாவைப் போய் கூட்டிட்டு வரணும். சென்னையில எங்கிருந்தாலும் தான் போய் கூட்டிட்டு வருவேன் என்கின்றார். அப்போது அவர் தன்னுடைய அப்பாவின் போனை எடுத்து பார்க்கும் போது அவர்கள் நிலாவைத் துாக்கி வைத்திருக்கும் போட்டோவைப் பார்த்து யார் என்று கேட்க அது தெரிந்த குழந்தை என்கின்றனர்.

இருப்பினும் அவர் சந்தேகத்தில் மற்ற பேட்டோக்களைப் பார்க்கும் போது அமிர்தாவும் நிலாவைத் துாக்கி வைத்திருக்கும் போட்டோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு உண்மையைச் சொல்லுங்க இது யாருடைய குழந்தை என்று கேட்கின்றார். அம்போது அவருடைய அம்மா இது உன் குழந்தை தான் என்று சொன்னதும் கணேஷ் அழுகின்றார்.


நான் போய்ட்டன் தானே என் குழந்தையையும் பொண்டாட்டியையும் பார்க்க முடியாமல் தான் அனுப்பி வைச்சீங்களா எனக் கேட்டு அழ அவரின் பெற்றோர் சமாதானப்படுத்துகின்றனர். தொடர்ந்து இனியா கிராமவாசிகளிடம் கேள்விகள் பல கேட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த ஈஸ்வரி பாக்கியாவிடம் இனியா பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்.


பின்பு கோபி போன் எடுத்து நலம் விசாரிக்க, ஈஸ்வரி இங்க எந்தப் பிரச்சினையும் இல்லை, பிரச்சினை வந்தாலும் கவலை இல்ல அதான் பாக்கியா இருக்கிறாளே என்கின்றார்.தொடர்ந்து பாக்கியா எந்த பிரச்சினை வந்தாலும் அதை அவ சமாளிச்சுப்பா என்று சொல்ல கடுப்பான கோபி சிக்னல் இல்லாதது போல போனை கட் செய்து விடுகின்றார்.பின்னர் எல்லோரும் சாப்பிட இருக்க பாக்கியா ஆடர் செய்வதைப் பார்த்து ஈஸ்வரி ஆச்சரியமாகப் பார்க்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement