• Sep 20 2024

கயலை மண மேடைக்கு வர வைக்க எழில் தீட்டிய புதுத் திட்டம்... கயலுக்கு வந்த பேராபத்து... மாஸாக என்ட்ரி கொடுத்த ஈஸ்வரி...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்து அறியப் பலரும் ஆவலாக உள்ளனர்.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் ரவுடிக்கும்பல் கயலை விட்டுத் துரத்துகின்றனர். மறுபுறம் எழில் கயலின் அம்மாவிடம் "ஆண்டி இதை விட நல்ல சான்ஸ் இனி அமையாது, நான் சொல்லுற மாதிரி செய்தால் கயல் மறுவார்த்தை பேசாமல் மேடைக்கு வருவா" என்கிறார்.


அதேசமயம் கயலை விட்டுத் துரத்திய கும்பல் கத்தியால் குத்த முயற்சி செய்கின்றது, அந்த சமயத்தில் ஈஸ்வரி வருகின்றார். ஈஸ்வரியைக் கண்டதும் அந்தக் கும்பல் பயந்து நடுங்குகின்றது.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.

Advertisement

Advertisement