• Sep 20 2024

கடந்த காலத்தை மறந்த அப்பத்தா..? பைத்தியம் பிடித்த மாதிரி நடந்து கொள்ளும் குணசேகரன்... விறுவிறுப்பின் உச்சத்தில் 'Ethirneechal'..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'எதிர்நீச்சல்' சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்நிலையில் நேற்றைய தினம் என்ன நிகழ்ந்துள்ளது என்பது குறித்துப் பார்ப்போம்.

அந்தவகையில் அப்பத்தா கண்முழித்து பார்க்கிறார். அவருக்கு எதுவுமே ஞாபகத்தில் இருப்பது போல் தெரியவில்லை. பின்னர் கஷ்டப்பட்டு பெட்டில் இருந்து எழுந்திருக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவரால் எழுந்திருக்க கொஞ்சமும் முடியவில்லை. இருப்பினும் தன்னுடைய கால்களை மெதுவாக ஊன்றி எழுந்து வெளியில் செல்கின்றார்.


இதனையடுத்து தர்ஷினி அப்பத்தா எழுந்ததை பார்த்து ஓடிச் சென்று எல்லோரிடமும் கூறுகின்றார். பின்னர் அனைவரும் அப்பத்தாவை பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். அவர்கள் அனைவரையும் சுற்றி சுற்றி அப்பத்தா பார்க்கிறார். இருப்பினும் அவருக்கு கடந்த கால நினைவு இருக்கிறதா என்பது தெரியவில்லை. யாரிடமும் எதுவும் பேசாமல் மிகவும் குழப்பத்துடன் இருக்கின்றார்.

அப்பத்தா ஜனனியை தான் தேடுகிறார் என நினைத்து ஜனனி வெளியே போய் இருக்கிறாள் வந்துவிடுவாள் எனக் கூறுகின்றனர். மேலும் ஞானம் குணசேகரனுக்கு போன் பண்ணி அப்பத்தா கண் முழித்ததை பற்றிக் கூறி சீக்கிரமாக வீட்டுக்கு வருமாறு கூறுகின்றார். இதனையடுத்து வீட்டுக்கு வந்த குணசேகரன் நேரடியாக அப்பத்தாவை பார்த்து கோபத்தில் திட்டித் தீர்க்கின்றார்.


அதாவது "முழிச்சுட்டியா... இன்னும் நீ சாகலையா... என்னை என்ன பாடுபடுத்திட்டே. சொத்து, சுகம், தூக்கம் எல்லாமே உன்னால தான் போயிடுச்சு. மகராசி மாதிரி நான் மதுரையில வாழ்ந்தேன். என்ன பித்து புடிச்சு பைத்தியம் மாதிரி அலைய விட்டுட்ட" எனப் பயித்தியம் பிடித்தவர் போல் தாறுமாறாக கத்துகின்றார்.

அதற்கு ரேணுகா, விசாலாட்சி "உடம்பு முடியாதவங்க இப்ப தான் எழுந்து உட்கார்ந்து இருக்காங்க. அவங்க முதல சரியாகட்டும். பொறுமையா இருங்க. திரும்பவும் அவங்களுக்கு உடம்புக்கு ஏதாவது வந்துட போகுது" எனக் கூறுகின்றனர். இருப்பினும் குணசேகரன் விடாது அப்பத்தாவை திட்டிக் கத்துகின்றார். இதன் பின்னர் குணசேகரன் ஆடிட்டரையும், வக்கீலையும் வர சொல்கிறார். 


பின்னர் நந்தினி "ஏன் இப்படி வெறி பிடிச்சு கத்துறீங்க. நீங்க கத்துறது எங்களாலே தாங்க முடியல. அப்பத்தாவுக்கு ஏதாவது ஆக போகுது" என கூறுகின்றார். அதையும் காதில் வாங்காத குணசேகரன் "ஏய் அப்பத்தா கிழவி வாயை திறந்து பேசு பேசு" என்கிறார். அதுமட்டுமல்லாது "ஹாஸ்பிடலில் இருப்பது போல டாக்டர், நர்ஸ் என எல்லா வசதியும் செய்து கொடுத்து ஷிபிட் போட்டு பார்த்துக்க வச்சு கை காலை எல்லாம் அமுக்கிவிட்டேன்" எனவும் கூறிப் புலம்புகின்றார்.

பதிலுக்கு நந்தினி "இதெல்லாம் சொத்துக்காக தானே செஞ்சீங்க. அப்போ கொஞ்ச நேரம் அமைதியா இருங்க" என்கிறார். ஆனால் குணசேகரனோ விடாமல் கத்திக் கொண்டு தான் இருக்கின்றார். இவ்வாறாக நேற்றைய எபிசோட் அமைந்துள்ளது.

எனவே அப்பத்தாவிற்கு சுய நினைவு இருக்கா..? கடந்த காலம் பற்றிய நினைவு இருக்கா..? இல்லையா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement