சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணியில் இருப்பது மட்டுமல்லாது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை பார்ப்போம்.
அந்தவகையில் அப்பத்தாவிடம் சொத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் நோக்குடன் குணசேகரன் போலீஸ் இன்ஸ்பெக்டரை வீட்டுக்கு வரவைத்துள்ளார். ஆனால் அப்பத்தாவோ நான் ஜீவானந்தத்தை பார்க்காமல் கையெழுத்து போட முடியாது எனக் கூறுகின்றார். பதிலுக்கு குணசேகரனோ தாராவை காட்டி அப்பத்தாவை மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிடுகிறார். இருப்பினை கையெழுத்தை போட்ட அப்பத்தா குணசேகரனை பார்த்து கிண்டலாக சிரிக்கின்றார். அது எதனால் என்பது புரியவில்லை.
மறுபுறம் ஜீவானந்தத்தின் வீட்டிற்குள் நுழைந்த வளவன் கும்பல் ஜீவானந்தம், கயல்விழி மற்றும் வெண்பாவை தாக்குகிறார்கள். ஆனால் ஜீவானந்தமோ ஒரே ஆளாக தனித்து நின்று அவர்கள் அனைவருடனும் சண்டையிடுகிறார்.
அந்த சமயத்தில் உள்ளே வந்த ஜனனி ஜீவானந்தத்தையும், குடும்பத்தையும் காப்பாற்ற போராடுகின்றார். ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வளவன் துப்பாக்கியால் சுடுகின்றார். இதில் ஜீவானந்தத்தின் மனைவி கயல்விழி ரத்த வெள்ளத்தில் உயிரிழக்கின்றார். இதனைத் தொடர்ந்து ரவுடிக் கும்பல் அங்கிருந்து ஓடிவிடுகிறார்கள்.
பின்னர் அங்கு நின்ற கதிரையும் இழுத்துக் கொண்டு வளவனும் சென்று விடுகின்றார். கயல்விழி இறந்தமையால் ஜீவானந்தமும், மகளும் கதறி அழுகின்றனர். இதனைப் பார்த்த ஜனனி என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளார். இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.
Listen News!