சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில் இந்த சீரியலில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்பது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் விசாலாட்சி "குணசேகரனைப் பார்க்காமலே கண்ணு மூடிடுவானோ என்று பயமாக இருக்குடா" எனக் கூறி அழுகின்றார்.
அதற்கு கதிர் "பெரிய தலை நீ எல்லாம் கிடையாது இந்த பட்டு தான் மண்டையைப் போடும்" எனக்கூறி கட்டியணைத்து ஆறுதல் கூறுகின்றார்.
மறுபுறம் ஞானம் ரேணுகாவை தரதரவென இழுத்துச் செல்கின்றார். பின்னர் "இப்பிடியே ஓடி போய்டு போ" எனக் கத்துகின்றார். பதிலுக்கு ரேணுகா "சத்தியமா இதுக்கெல்லாம் நீ அனுபவிப்பாய்டா என அழுத வண்ணம் கூறுகின்றார்,
மேலும் ஜான்சிராணி கரிகாலனிடம், அண்ணன் மட்டும் வீட்டுக்கு வந்து மறு தாலியைக் கட்ட வைக்கட்டும் என்று சொல்ல கரிகாலன் அவள் நம்ம வழிக்கு வர மாட்டேங்குறாளே எனக் கூறுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.
Listen News!