• Sep 20 2024

இன்னும் 20 வருஷமானாலும் இவங்க தான் ஹீரோயின்... த்ரிஷாவின் புகைப்படங்களை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திர நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் 1999-ஆம் ஆண்டு பிரசாந்த்-சிம்ரன் நடித்த 'ஜோடி' என்ற திரைப்படத்தினல் துணை நடிகையாக நடித்து தனது திரைப் பயணத்தை தொடங்கியவர். அதன்பின்னர் 2002-ஆம் ஆண்டு வெளியான 'மௌனம் பேசியதே' என்ற படத்தின் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.


அப்படத்தினைத் தொடர்ந்து த்ரிஷாவின் சினிமா பயணம் ஓஹோ என்ற அளவிற்கு சூப்பராக வளர்ந்து சென்றது. அதாவது தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிப் படங்களிலும் நடித்தார்.

இவ்வாறாக பல படங்களிலும் தன்னுடைய நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்ற த்ரிஷா நடிப்பில் தற்போது 'பொன்னியின் செல்வன்' என்ற படம் உருவாகி வருகின்றது.

இப்பிரம்மாண்ட படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங். அப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார்.


த்ரிஷா படங்களை தாண்டியும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அதில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகின்ற இவர் தற்போதும் தன்னுடைய புகைப்படத்தினை பதிவிட்டு இருக்கின்றார்.

அதனைப் பார்த்த ரசிகர்கள் "இன்னும் 20 வருஷத்திற்கு நீங்க தான் ஹீரோயின்" எனக் கூறி ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement