தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களிலும் பாலிவூடிலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் சமந்தா.
பல நாட்களின் பின் சமந்தா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் சாகுந்தலம். இப்படத்தை குணசேகர் இயக்கியிருந்தார்.
தில் ராஜு தயாரித்த இப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது. ஆனால், முதல் நாளில் இருந்து மோசமான விமர்சனங்களை மட்டுமே இப்படத்திற்கு கிடைத்து வருகின்றது.
சாகுந்தலம் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை ரூ. 10 கோடி கூட வசூல் செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு ரூ. 50 கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ. 10 கோடி கூட வசூல் செய்யவில்லை என்பதால் சாகுந்தலம் திரைப்படத்தினால் தயாரிப்பாளருக்கு கண்டிப்பாக நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகின்றது.
Listen News!