சின்னத்திரையில் தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபல்யமானவர் தான் மஹாலக்ஷ்மி. இவர் கடந்த 2016ம் ஆண்டு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். பின்பு நடிகர் ஈஸ்வரனுடன் கிசுகிசுக்கப்பட்டதால் தனது கணவரைப் பிரிந்து விவாகரத்து பெற்றார்.
இப்படி ஒரு நிலையில் மஹாலக்ஷ்மி, தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டு இருக்கிறார். சமீபத்தில் ரவீந்தர் தனது முகநூல் பக்கத்தில் மஹாலக்ஷ்மியுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ‘மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லவாங்க. ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையை கிடச்சா. Coming soon live in FAT MAN FACTSKutty story with my pondatiiiii என்று பதிவிட்டு இருக்கிறார்.
ரவிந்தரனின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ரவீந்தரை திருமணம் செய்த மஹாலக்ஷ்மியை கேலி செய்தவர்களுக்கு நடிகையும் மஹாலக்ஷமியின் நண்பியுமான காஜல் பசுபதி பதிலடி கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் முகநூலில் பெண் ஒருவர் ‘மனச மனி பர்ஸ் உள்ள ஒளிச்சி வச்சிருக்காங்களா என்று கேலி செய்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த காஜல் ‘அது எப்படிங்கோ, நயன் விக்னேஷ் சிவன கட்டினாலும் நயன் தான் தப்பு. மஹாலக்ஷ்மி ரவீந்தரை கட்டிக்கிட்டாலும் மஹாலக்ஷ்மி தான் தப்பு. என்ன ஒரு அம்பல புத்தில’ என்று பதிவிட்டு ‘பெண்களே பெண்களுக்கு எதிரா இருக்கற வரைக்கும் ஆண்கள அசைக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.’
Listen News!