விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டிங் முதலில் ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் 'நீயா நானா'. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த நிகழ்ச்சியில் பல உண்மையான விடயங்கள் மற்றும் மக்கள் சமுகத்திற்கு தேவையான விடயங்கள் பேசப்படுவதால் கோபிநாத் ஷோ என்றாலே அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.மேலும் இரண்டு தரப்புகள் இருப்பார்கள் அவர் அவர் பக்கங்களில் உள்ள சரியான கூற்றை கூறுவார்கள்.
அதில் எது சமுக பார்வைக்கு ஏற்றதோ அதனை கோபிநாத் குறிப்பாக எடுத்து பேசுவார்.இது மட்டுமல்ல கோபிநாத் நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமல்ல ஒரு வானொலி கலைஞர், பேச்சாளர், விவாதிப்பவர், சிறந்த மனிதர் என பல திறமைகள் இவரினுள் இருக்கிறது. இதனாலே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவுள்ளது.
இந்த நிலையில் இவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் தொகுப்பாளினி டிடி ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்வதால் உங்களுக்கு சலித்துப் போகவில்லையா என்று கேட்க அதற்கு பதில் கூறிய கோபிநாத்,ஒருவேலையை சிறப்பாக செய்யும் போது எப்படி போர் அடிக்கும். என்னை என்னுடைய நண்பர்கள் எல்லோரும் கலாய்ப்பாங்க.
TV Off பண்ணா கூட உன் மூஞ்சி தான் வருதுன்னு சொல்லுவாங்க, அப்போ டிவில நிறைய நிகழ்ச்சிகள் செய்திட்டு இரு்போம். இப்போ தான் அந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் யூடியூப் சேனல் மூலமே நடத்திறாங்க என்று சொல்லியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!