பிக்பாஸ் நிகழ்ச்சியானது 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், தற்பொழுது வீட்டை விட்டு வெளியறிய போட்டியாளர்கள் இருவர் இருவராக வந்து கொண்டிருக்கின்றனர். அசல் கோளாறு, GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.
உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார். அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் விக்ரமன் மற்றும் அசல் அமர்ந்து தனியே பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அசல்," நீங்க கரெக்ட்டா கருத்துக்களை பேசி பாஸிட்டிவா பிரச்சனைய முடிக்கிறீங்க. ஆனா உங்க கிட்டயும் அது இருக்குது" என சொல்ல எது? என கேள்வியெழுப்புகிறார் விக்ரமன்.
தொடர்ந்து பேசும் அசல்,"முன்னாடி ஒன்னு பேசிட்டு அப்பிறம் அது வேற மாதிரி இருக்கு" என்கிறார். அப்போது, "பின்னாடி பேசுற மாதிரி இருக்கா?" எனக் கேட்கிறார் விக்ரமன். அதனை மறுக்கும் அசல்,"அப்படி இல்ல. பின்னாடி பேச ஒருத்தரு இருக்காரு. அதாவது நீங்க முன்னாடி ஒரு விஷயம் சொல்றீங்க அதுக்கு அப்புறம் வேற மாதிரி சொல்றீங்க. ஆனா இது மனுஷனோட இயல்பு தான்" என்கிறார்.
இதனையடுத்து பேசும் விக்ரமன்,"நீ வெளியே போனப்போ எனக்கு Guilty ஆ இருந்துச்சு. என்ன பத்தி தவறான புரிதலோட தானே போன. நான் கேமரா முன்னாடி நடிக்கிறேங்குற மாதிரி" என்கிறார். அதற்கு பதில் அளிக்கும் அசல்,"அப்போ நான் உங்க கிட்ட வந்து அந்த கதையை சொன்னேன். ஆனா நிறைய பேரு சொல்லாம உள்ளேயே வச்சிட்டு இருந்திருக்காங்க" என்கிறார். தொடர்ந்து பேசும் விக்ரமன்,"நீ வீட்டை விட்டு வெளியே போனப்போ, என்னாடா இப்படி யோசிக்க வச்சுட்டு போய்ட்டான்னு தோணுச்சு" என சிரித்துக்கொண்டே சொல்ல அசலும் சிரிக்கிறார்.
Listen News!