• Sep 20 2024

என்னோட ஷுட்டிங்கிலும் எல்லோருக்கும் ஒரே சாப்பாடு தான்- விஜயகாந்த் மறைவிக்கு பின்னர் அருண் விஜய் எடுத்த முடிவு

stella / 8 months ago

Advertisement

Listen News!

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமாகிய விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இறப்புக்குள்ளானார். இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவருடைய சமாதிக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சரத்குமார், கார்த்தி உள்ளிட்டவர்கள் விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு விஜயகாந்த் குறித்த தங்களது அனுபவங்கள் மற்றும் வருத்தங்களை பகிர்ந்துக் கொண்டனர். இந்நிலையில் நடிகர் அருண் விஜய்யும் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.


அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது, விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ரொம்ப வருத்தம் அளிக்கின்றது.சினிமாவில் நடிக்க வருபவர்கள் ரஜினி, கமல் போல வரவேண்டும் என்று நினைப்பார்கள் என்றும் ஆனால் தான் விஜயகாந்த் போல ஆக்ஷன் ஹீரோவாக வேண்டும் என்ற கனவிலேயே நடிக்க வந்ததாகவும் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் எப்படி சண்டை போட வேண்டும் என்றெல்லாம் விஜயகாந்த் தான் சொல்லித்தருவார். அவர் செய்த நிறைய நல்ல விஷயங்களை நானும் செய்யனும்,அத்தோடு என்னோட ஷுட்டிங்கிலும் இனிமேல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணவு தான் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement