பிரேம்ஜி-யை கட்டிப்பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு என் புருஷனுடன் மீண்டும் சேர்ந்துவிட்டேன் என பின்னணி பாடகி ஒருவர் பதிவிட்டுள்ளது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
நடிகர், இயக்குநர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கியவர் கங்கை அமரன். மேலும் இவரது மகன்களான வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி ஆகிய இருவரும் தற்போது சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். வெங்கட் பிரபு தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அத்தோடு சென்னை 28 மூலம் தொடங்கிய இவரது திரைப்பயணம், தற்போது மாநாடு வரை மாஸாக சென்று கொண்டிருக்கிறது.
அத்தோடு மறுபுறம் பிரேம்ஜி தன் தந்தையை போல் இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவருக்கு வயது 40-ஐ கடந்த விட்ட போதிலும், இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வந்துகொண்டிருக்கிறார்.அத்தோடு பேட்டிகளிலும் திருமணம் நடக்கும் போது நடக்கும் என கூலாக பதிலளித்து வருகிறார் பிரேம்ஜி.
இவ்வாறுஇருக்கையில், பிரேம்ஜி-யை கட்டிப்பிடித்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு என் புருஷனுடன் மீண்டும் சேர்ந்துவிட்டேன் என பின்னணி பாடகி வினைதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, அதன் பின்னணியின் ‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ என்கிற பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளார். எனினும் இதனை பிரேம்ஜியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
மேலும் இதைப்பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்கள், என்னது பிரேம்ஜிக்கு கல்யாணம் ஆயிடுச்சா என பதிவிட்டு வருகின்றனர். பிரேம்ஜியும் வினைதாவும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்களா என்றும் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். நிஜமாகவே இவர்கள் இருவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டதா என்பதை அவர்கள் இருவரும் சொன்னால் தான் உண்மை தெரியவரும்.
Listen News!