• Sep 21 2024

என் தாயைக் கூட இப்படி செய்தார்கள்... அந்த விஷயத்தால் மனம் உடைந்து அழுத ஷெரின்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன்பிறகு சில படங்களே நடித்த அவர் பிறகு என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்தது.

இதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் அட துள்ளுவதோ இளமை நடிகையா இது என ஷாக்காக பார்த்தார்கள்.


பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடிகை ஷெரின் கடுமையான ஒர்க் அவுட் செய்து உடல்எடையைக் குறைத்து பழைய நிலைமைக்கு வந்தார்.


இந்த நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் ஷெரின் சமூக வலைத்தளங்களில் பரவிய அவதூறு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்தவகையில் அவர் கூறுகையில் "நான் வலைத்தளத்தில் அவதூறுகளை எதிர்கொண்டேன். எனக்கு நிறைய வெறுப்பாளர்கள் உருவானார்கள். என் பெற்றோரை விமர்சித்தனர். 


அதுமட்டுமல்லாது எனது நாயை கூட விட்டு வைக்காமல் சீண்டி பார்த்தனர். என்னை பற்றிய விமர்சனங்களை கடந்து போகலாம். ஆனால் எனது பெற்றோருக்கு பிரச்சினை வரும்போது எப்படி என்னால் பொறுத்து போக முடியும். இதனால் மனம் உடைந்து அழுதேன். என்னை இழிவுபடுத்தி பேசலாம். ஆனால் எனது தாயை எப்படி பேசலாம்" என்றார்.


அத்தோடு "தவறானவர்கள்தான் மற்றவர்களை பற்றி தவறாக பேசுவார்கள். சமூக வலைதளங்களால் நன்மை இருக்கிறது. அதே நேரம் மிரட்டல்களையும் எதிர்கொள்ள வேண்டி இருப்பது அதன் தீமையாகும்'' எனவும் கூறியுள்ளார் நடிகை ஷெரின்.

Advertisement

Advertisement