• Sep 20 2024

இப்பவும் என்னை மிரட்டிட்டு தான் இருக்கிறாங்க என்னால முடில- கண்ணீர் மல்க பேசிய பார்வதி நாயர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

என்னை அறிந்தால், உத்தமவில்லன், எங்கிட்ட மோதாதே, நிமிர் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளவர் தான் பார்வதி நாயர்.இவர் இதனைத் தொடர்ந்து ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் அண்மையில் இவர் போலிஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் தனது வீட்டிலுள்ள விலையுயர்ந்த பொருட்கள் காணாமல் போயுள்ளதாகவும் இதனை தனது வீட்டில் வேலை செய்யும் நபர் ஒருவரே எடுத்திருந்ததாகவும் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் இது குறித்து அண்மையில் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.


அதில் அவர் கூறியதாவது எனது வீட்டில் திருட்டு போன சனிக்கிழமை சுபாஸ் என்பவர் மட்டுமே பண்புரிந்து கொண்டிருந்தார் எனவே  இப்படி களவு போனது குறித்து எனக்கு தெரிய வர நான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தேன்.அப்போ அவங்க என்னோட வீட்டில வேலை செய்யிற எல்லோரையும் கூப்பிட்டு விசாரிச்சாங்க.

ஆனால் இந்த ஆளு மட்டும் வரல அவங்க யார் யாரையோ வச்சு என்னை மிரட்டிட்டு வருகிறாங்க.இப்ப வரைக்கும் என்னை மிரட்டிட்டே இருக்கிறாங்க அவங்க அப்பா பேசுறேன் அண்ணா பேசுறேன் என்று பேசிறாங்க அவங்க தான் தப்பு பண்ணியிருக்கிறாங்க என்றதற்கு என்கிட்ட நிறைய ஆதாரம் இருக்கு நான் வேர்க் பண்ணின பிரபலங்களிடம் கூட என்னை பற்றி தப்பா கூறிட்டு வருகிறாங்க.


அவங்களுக்கு நல்ல தண்டனை கொடுக்கணும் அதற்காகத் தான் நான் கமிஷனர் ஆபீஸ்ல கம்லெயின் கொடுக்க வந்துள்ளேன் இந்த பிரச்சினையால் நான் நிறைய குழம்பிப் போயுள்ளேன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement