• Sep 20 2024

தாவணியை கழட்டி விட்டு கவர்ச்சியை அள்ளி வீசும் 'பிரேமம்' பட நாயகி... கூடவே வாடாத மல்லிப்பூவும் இருக்கே...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிக்கொடி நாட்டிய ஒரு திரைப்படம் 'பிரேமம்'. இதில் கதாநாயகனாக நிவின் பாலி நடித்திருந்தார். அத்தோடு அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன் ஆகிய மூன்று பேரும் ஹீரோயினாக நடித்திருந்தனர்.


மேலும் இவர்கள் மூவரின் கதாபாத்திரமும் மக்கள் மனதில் பதியும்படி சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்ததோடு அனைவரும் தமது நடிப்புத் திறமையையும் இதில் திறம்பட வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். 

இதனால் இன்றுவரையும் அவர்களுக்கு சிறந்த ஒரு அடையாளத்தைக் கொடுத்த படமாக 'பிரேமம்' உள்ளது. இப்படத்தினைத் தொடர்ந்து இந்த மூன்று நாயகிகளுக்கும் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கின.

அந்த வகையில் நடிகை மடோனா செபஸ்டியன் தமிழில் விஜய் சேதுபதியின் 'காதலும் கடந்து போகும்' என்ற படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானார். 


இந்தப் படத்திலும் அவர் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தமையால், இதையடுத்து 'கவண்' என்ற படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியிலும் மென்மேலும் பிரபல்யமானார்.


இவ்வாறாக ஒரு சில படங்களில் நடித்து தமிழில் புகழ் பெற்று வந்த இவர், பின்னர் தெலுங்கு திரையுலகப் பக்கமாகத் தன்னுடைய கவனத்தை திருப்பினார். அங்கு நானியுடன் இணைந்து 'ஷியாம் சிங்கா ராய்' என்ற படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படமானது அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் அவருக்கு தற்போது டோலிவுட்டில் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணமே இருக்கின்றன.


இவர் நடிகை மட்டுமல்லாது சிறந்த பாடகியும் கூட. அந்தவகையில் மலையாளத்தில் இரண்டு படங்களில் பாடியுள்ள அவர், தமிழில் 'கவண்' படத்தில் இடம்பெறும் 'ஹாப்பி நியூ இயர்..' என்ற பாடலை டி.ராஜேந்தர் உடன் இணைந்து பாடி அசத்தி இருந்தார்.


நடிகை மடோனா செபஸ்டியன் தற்போது தன்னுடைய உடல் எடையை சற்றுக் குறைத்திருக்கின்றார். அதனைத் தொடர்ந்து விதவிதமாக போட்டோஷூட்களையும் நடத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அதில் இவர் தலையில் மாலை அணிந்து முன் அழகு தெரியும் வகையில் பாஸ் கொடுத்திருக்கின்றார். 


இதனூடாக இவர் "கவர்ச்சியாக நடிக்கவும் தயார்" என்பதையே கூறுகின்றார் எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர். இப்புகைப்படங்கள் வெளியாகிய நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகியும் வருகின்றன.

Advertisement

Advertisement