தென்னிய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருப்பதோடு தற்பொழுது வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பதிவு ஒன்று வைரலாகி வருகின்றது.
அதாவது “கடந்த சில மாதங்களாக சில விஷயங்கள் என்னைத் தொந்தரவு செய்கின்றன. அவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டிய நேரம் இது என நினைக்கிறேன். ஏனெனில் நான் எனக்காக மட்டுமே பேசுகிறேன்.. இதனை நான் சில வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும் ஆனால் சற்று தாமதமாகிவிட்டது.
நான் என் சினிமா பயணத்தை தொடங்கியதிலிருந்து நிறைய வெறுப்பைப் பெற்று வருகிறேன். நிறைய ட்ரோல்களால் சூழப்பட்டிருக்கிறேன். நான் தேர்வு செய்த இந்த வாழ்க்கை மிகவும் சிக்கலானது என்பது எனக்குத் தெரியும். அனைவரும் என்னை ஆதரிக்க வேண்டும் என சொல்லவில்லை, பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லலாம் அதில் தவறில்லை. ஆனால் இப்படி ட்ரோல் செய்வது சரியல்ல.
நன் தேர்ந்தெடுத்துள்ள இந்த பணி பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக என்பது எனக்கு நன்றாக தெரியும். எனது படங்கள் மூலம் உங்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியில்தான் எனக்கு அதிக அக்கறை உள்ளது. உங்களது மகிழ்ச்சிக்காக நான் இன்னும் கடினமாக உழைக்க தயார். ஆனால் ஒவ்வொரு முறையும் முன்னேறி செல்லும்போது தடைகள் வந்தால், என்னால் எப்படி சாதிக்க முடியும்?சமூக வலைதளங்களில் இல்லாத விஷயங்களை விளம்பரப்படுத்துவது, கேலி செய்வது, பைத்தியக்காரத்தனமான கருத்துக்களை தெரிவிப்பது போன்றவை என் மனதை மிகவும் காயப்படுத்துகிறது. இவையெல்லாம் என் வேலையை செய்ய விடாமல் தடுக்கிறது.
நேர்காணல்களில் நான் சொல்லும் சில விஷயங்கள் எனக்கே எதிராக மாறுவதையும் கண்டேன். சினிமாவில் எனக்குள்ள நட்பின் அடிப்படையில் பொய்யான கதைகளை பரப்புகிறார்கள். என்னைப்பற்றிய விமர்சனங்கள் அர்த்தமுள்ளதாகவும், ஆக்கபூர்வமானவும் இருந்தால் நான் அவற்றை வரவேற்கிறேன், ஏனென்றால் அவை என்னை மாற்றிக்கொள்ளவும், மேம்படுத்தவும் உதவுகின்றன.
ரொம்ப நாளா இதையெல்லாம் தவிர்த்துவிட்டு பொறுமையா இருந்தேன். ஆனா இப்போ இது எல்லைமீறிவிட்டது. இனிமேல் பதில் சொல்லலைன்னா வேற எதாச்சும் எழுதுவாங்க. என்னை பலர் நேசிக்கிறார்கள், எனக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அவர்களின் அன்பும் ஆதரவும் என்னை முன்னோக்கி செல்ல உதவுகிறது. அவர்களுக்காகவே இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர்களை சந்தோஷப்படுத்துவதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” என ராஷ்மிகா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Listen News!