பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 6ஆவது வாரத்தில் காலடி எடுத்து வைத்திருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் இறுதியில் ஒருவர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் ஜி.பி முத்து, சாந்தி, அசல் ஷெரினா, மஹேஸ்வரி ஆகியோர் வெளியேறிவிட்டனர். இந்த வாரம் யார் என்ற கேள்விக் குறியோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு சண்டை, வாய்க்கலப்பு, வாக்குவாதம் என மாறி மாறி இடம்பெற்ற வண்ணம் தான் இருக்கின்றது. அதுமட்டுமல்லாது பிக்பாஸும் இவர்களுக்குள் சண்டையை மூட்டும் வகையில் டாஸ்க்குகளைக் கொடுத்த வண்ணம் தான் இருக்கின்றார்.
அந்தவகையில் இன்றைய டாஸ்க்காக ராஜ ம்யூசியமாக பிக்பாஸ் வீடு மாற வேண்டும் எனக் கூறியிருந்தார்கள். இந்நிலையில் இன்றைய தினத்திற்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் இளவரசியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். அதில் மைனா, ஆயிஷா ஆகியோர் குறைந்த வாக்குகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
அத்தோடு காது கேட்காத சேவகராக மைனா தேர்ந்தெடுக்கப் படுகின்றார். உடனே மைனா "என்னை ஒருத்தன் கூட ஆதரிக்கவில்லை, இவர்கள் அனைவரும் நம் முதுகில் குத்தி விட்டார்கள்" எனக் கூறி அங்கிருந்த தலையணையைத் தூக்கி எறிகின்றார். இவ்வாறாக இன்றைய நாளின் 3ஆவது ப்ரோமோ வெளிவந்து இருக்கின்றது.
இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!
Listen News!